TN Board 9th Social Science Solutions History Chapter 4 அறிவு மலர்ச்சியும், சமூக – அரசியல் மாற்றங்களும்

9th Social Science Guide அறிவு மலர்ச்சியும், சமூக – அரசியல் மாற்றங்களும் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்க

Question 1.
ஒரு தத்துவப் பிரிவை நிறுவிய ______ எளிமைக்கும் தன்னல மறுப்பிற்கும் உதாரணமாக விளங்கினார்.
அ) புத்தர்
ஆ) லாவோட்சே
இ) கன்ஃபூசியஸ்
ஈ) ஜொராஸ்டர்
விடை:
அ) புத்தர்

Question 2
மகாவீரரின் போதனைகளால் ஈர்க்கப்பட்ட மகத அரசர் _______
அ) தனநந்தர்
ஆ) சந்திரகுப்தர்
இ) பிம்பிசாரர்
ஈ) சிசுநாகர்
விடை:
இ) பிம்பிசாரர்

Question 3.
வடக்கில் காபூல் பள்ளத்தாக்கிலிருந்து தெற்கில் கோதாவரி வரை பரவியிருந்த வட இந்தியாவின் ______ எனப்பட்ட பதினாறு மாநிலங்களின் அரசுகளின் எழுச்சி ஏற்பட்டது.
அ) மஹாஜனபதங்கள்
ஆ) கனசங்கங்கள்
இ) திராவிடம்
ஈ) தட்சிணபதா
விடை:
அ) மஹாஜனபதங்கள்

 

Question 4.
மும்மணிகள் (திரி ரத்னா) என்ற மூன்று கொள்கைகளை போதித்தவர் _____
அ) புத்தர்
ஆ) மகாவீரர்
இ) லாவோட்சே
ஈ) கன்ஃபூசியஸ்
விடை:
ஆ) மகாவீரர்

Question 5.
மௌரிய ஆட்சி அமைப்பு மற்றும் சமூகம் குறித்த செய்திகளைத் தன் குறிப்புகளால் அளித்தவர்.
அ) மார்க்கோ போலோ
ஆ) ஃபாஹியான்
இ) மெகஸ்தனிஸ்
ஈ) செல்யூகஸ்
விடை:
இ) மெகஸ்தனிஸ்

Question 6.
(i) மகத அரசர்களின் கீழ் இருந்த மகாமாத்ரேயர்கள் அமைச்சர்களுக்குச் செயலாளர்களாகச் செயல்பட்டார்கள்.
(ii) மெகஸ்தனிஸ் எழுதிய ‘இண்டிகா’ என்னும் வரலாற்றுக் குறிப்பு மௌரிய ஆட்சி அமைப்பு மற்றும் சமூகம் குறித்த ஆவணமாக விளங்குகிறது.
(iii) ஒரு பேரரசைக் கட்டமைக்க நந்தர் செய்த முயற்சியை, மௌரிய அரசை உருவாக்கிய அசோகர் தடுத்து நிறுத்தினார்.
(iv) மரபுகளின்படி, சந்திரகுப்தர் அவரது வாழ்வின் இறுதியில் புத்த சமயத்தின் தீவிரமான ஆதரவாளராக இருந்தார்.
அ) (i) சரி
ஆ) (ii) சரி
இ) (i) மற்றும்
(ii) சரி
ஈ)(iii) மற்றும்
(iv) சரி
விடை:
ஆ) (ii) சரி

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
வெவ்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த, பிரார்த்தனைகளும், மரபுவழிக் கதைகளும் அடங்கிய புனித இலக்கியத் தொகுப்பு _____ ஆகும்.
விடை:
ஜென்ட் அவெஸ்தா

Question 2.
கங்கைச் சமவெளியில் _____ வேளாண்மைக்கு மாடுகளின் தேவை அவசியமானது.
விடை:
இரும்பு – கலப்பை

Question 3.
______ தீர்த்தங்கரர்களின் நீண்ட மரபில் வந்தவர் என்றும் 24-வது மற்றும் கடைசி தீர்த்தங்கரர் என்றும் சமணர்கள் நம்புகிறார்கள்.
விடை:
மகாவீரர்

 

Question 4.
புத்தருக்கு ஞானோதயம் ஏற்பட்ட இடத்தில் கட்டப்பட்டுள்ள மஹாபோதி கோயில் இன்றும் _____ இல் உள்ளது.
விடை:
புத்தகயா.

Question 5.
மௌரியப் பேரரசைப் பற்றியும் குறிப்பாக அசோகரின் தர்மம் சார்ந்த ஆட்சியைப் பற்றியும் அறிந்து கொள்ள _____ பாறைக் குறிப்புகள் பெரிதும் உதவுகின்றன.
விடை:
அசோகரின்

III. சரியான கூற்றைத் தேர்வு செய்க.

Question 1.
அ) வெண்கலக் கருவிகளின் வரவால் கங்கை ஆற்றங்கரையில் இருந்த அடர்த்தியான காடுகளை அகற்றுவது எளிதானது.
ஆ) அசிவிகம் மேற்கு இந்தியாவில் சிறு அளவில் பரவியிருந்தது.
இ) குறிப்பிட்ட இனக்குழுக்கள் ஆதிக்கம் செலுத்திய நிலத்தொகுதிகள் மௌரியர்களுக்கு முற்பட்ட அரசுகள் எனப்பட்டன.
ஈ) இலக்கியங்களில் குறிப்பிடப்படும் அரசுகளில் காசி, கோசலம், மகதம் ஆகியவை வலிமை படைத்தவையாக இருந்தன.
விடை:
ஈ) இலக்கியங்களில் குறிப்பிடப்படும் அரசுகளில் காசி, கோசலம், மகதம் ஆகியவை வலிமை படைத்தவையாக இருந்தன.
அ) மகதத்தின் முதல் முக்கியமான அரசன் அஜாதசத்ரு.
ஆ) நிர்வாகத்துக்கான ஒரு விரிவான கட்டமைப்பை உருவாக்குவதில் பிம்பிசாரர் வெற்றிகரமாகச் செயல்பட்டார்.
இ) வட இந்தியாவில் ஆட்சி செய்த சத்ரியர் அல்லாத அரசவம்சங்களில் முதலாமவர்கள் மௌரியர்களாகும்.
ஈ) ஒரு பேரரசுக்கான கட்டமைப்பை உருவாக்க நந்தர் மேற்கொண்ட முயற்சியை அசோகர் தடுத்து நிறுத்தினார்.
விடை:
ஆ) நிர்வாகத்துக்கான ஒரு விரிவான கட்டமைப்பை உருவாக்குவதில் பிம்பிசாரர் வெற்றிகரமாகச் செயல்பட்டார்.

IV. பொருத்துக.

V. சுருக்கமான விடை தருக.

Question 1.
ஹீனயானம் மற்றும் மகாயானம் பற்றி குறிப்பு வரைக.
விடை:
ஹீனயானம் (சிறிய பாதை) :

  • ஹீனயானம் புத்தர் போதித்த அசல் வடிவம்.
  • இதைப் பின்பற்றியவர்கள் புத்தரைத் தமது குருவாக ஏற்றார்கள். அவரைக் கடவுளாக வழிபடவில்லை.
  • இவர்கள் உருவவழிபாட்டை மறுத்தார்கள். மக்கள் மொழியையே (பாலி) தொடர்ந்து பயன்படுத்தினார்கள். மகாயானம்
  • மஹாயானம் புத்தர் கடவுளாக வழிபடப்பட்டார்.
  • இதைப் பின்பற்றுவோர் புத்தர் சிலைகளை நிறுவி அவர் புகழ்பாடும் மந்திரங்களைச் சொல்லி வழிபட்டனர்.
  • இவர்கள் தம்முடைய மதநூல்களை சமஸ்கிருதத்தில் எழுதினார்கள்.

Question 2.
மும்மணிகள் (திரி ரத்னா) – இச்சொல்லை விளக்கிக் கூறு.
விடை:
மும்மணிகள் (திரிரத்னா) என்று அழைக்கப்படும் சமண மதத்தின் முக்கியமான மூன்று கொள்கைகளைக் குறிப்பதாகும். அந்த மூன்று கொள்கைகள்,

  • நன்னம்பிக்கை – ஞானத்தில் நம்பிக்கை வைத்தல்.
  • நல்லறிவு – கடவுள் இல்லை, அனைத்துக்கும் ஆன்மா உண்டு என்ற கருத்துகளை ஏற்றல்.
  • நன்னடத்தை – மகாவீரரின் ஐம்பெரும் சூளுரைகளைக் கடைபிடிப்பிடித்தல்.

 

Question 3.
அஜாத சத்ருவைப் பற்றிக் கூறு?
விடை:

  • இராணுவ வெற்றிகள் மூலம் ஆட்சியை விரிவுபடுத்தும் தனது தந்தையின் கொள்கையைப் பின்பற்றிய அஜாத சத்ரு, தனது தந்தை பிம்பிசாரரைக் கொன்றுவிட்டு கி.மு. 493ல் அரியணை ஏறினார்.
  • ஐந்து மலைகளால் சூழப்பட்ட பாதுகாப்பான, மகதத் தலைநகரான ராஜகிருஹம் கோட்டையை
    வலுப்படுத்தினார். கங்கைக் கரையில் பாடலி கிராமத்தில் மற்றொரு கோட்டையை கட்டினார்.
  • உள்ளூர் உற்பத்திகளுக்கான பரிமாற்றமையமாக விளங்கிய பாடலிபுத்திரம் மௌரியத் தலைநகரமாக மாறியது. கி.மு. 461ல் அஜாத சத்ரு இறந்தார்.

Question 4.
கலிங்கா கல்வெட்டுக் குறிப்பு கூறுவது என்ன ?
விடை:
கலிங்கா கல்வெட்டு:

  • அசோகரின் கல்வெட்டுகளில் 2 கலிங்கக் கல்வெட்டுகள், ஒரு கல்வெட்டில் அசோகர் போர் மற்றும் வெற்றிக்காக நடந்த படுகொலைகளைக் கண்டு தான் அடைந்த மனவேதனையைப் பதிவு செய்துள்ளார்.
  • மற்றொரு கல்வெட்டில் அசோகர், தான் இனிமேல் கலிங்கப் போரில் நடந்த படுகொலைகளில் நூற்றில் ஒரு பங்காகக்கூட, ஏன் ஆயிரத்தில் ஒரு பங்கைக்கூட பொறுத்துக் கொள்ளப் போவதில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

Question 5.
புத்த சமயத்தைப் பரப்ப அசோகர் மேற்கொண்ட முயற்சிகள் என்னென்ன ?
விடை:

  • தீவிர புத்த பற்றாளரான அசோகர் புத்த மத கருத்துக்களை பாறைகளில் பொறித்தார். விலங்குகளைப் பலியிடுவது தடை செய்யப்பட்டது. விலங்குகளுக்கான மருத்துவமனைகள் திறக்கப்பட்டன.
  • தனது மகன் மகேந்திரனையும், மகள் சங்கமித்திரையையும் புத்த தம்மம் குறித்த செய்தியைப் பரப்ப இலங்கைக்கு அனுப்பினார்.

VI. விரிவான விடையளிக்கவும்.

Question 1.
கன்பூசியஸின் ஐந்து முக்கியமான கோட்பாடுகளை விளக்கிக் கூறு.
விடை:
கன்பூசியனிசத்தின் ஐந்து முக்கியக் கொள்கைகள்
Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 4 அறிவு மலர்ச்சியும், சமூக – அரசியல் மாற்றங்களும் 30

  • மேன்மையான மனிதர் என்பவர் வெறும் அறிவாளியோ, அறிஞரோ மட்டும் இல்லை, முன்மாதிரியான நடத்தை கொண்டவராகவும் இருக்க வேண்டும்.
  • மேன்மையான மனிதர் புத்திசாலித்தனம், துணிச்சல், நல்லெண்ணம் ஆகிய மூன்று பண்புகளைக் கொண்டவர்.

நேர்மை :

  • கீழ்ப்படிதல் வற்புறுத்தப்பட்டாலும் உத்தரவு தவறென்றால், இரு மகன் தனது தந்தையை எதிர்க்க வேண்டும், ஓர் அமைச்சர் அரசரை எதிர்க்க வேண்டும்.
  • ஆட்சியாளர்கள் பாரபட்சமின்றி ஆட்சி நடத்தவேண்டும்.

நன்னடத்தை :

  • குழந்தைகள் பெற்றோருக்கு கீழ்ப்படிய வேண்டும், மனைவி கணவனுக்கு கீழ்ப்படிய வேண்டும்.
  • நன்னடத்தை கொண்டோரைத்தான் அரசப் பதவிகளில் அமர்த்த வேண்டும்.

மெய்யறிவு :
மெய்யறிவு குடும்பத்திலிருந்துதான் வளரும். ஓர் ஒழுங்கான குடும்பத்தின் கட்டுப்பாடுமிக்க தனி நபர்தான் சமூகத்தின் அடித்தளம்.

நம்பகத்தன்மை :

  • அரசுக்கு அவசியமான மூன்று விஷயங்கள்
    • நாட்டில் போதுமான உணவு
    • போதுமான இராணுவத் தளவாடங்கள்
    • மக்களுக்கு ஆட்சியாளர் மீது நம்பிக்கை
  • அரசு இயங்க குறிக்கோள் வேண்டும். மக்களுக்கான கடமைகள் உண்டு.
    கன்பூசியனிசம் : மதம் அல்ல ஒரு சமூக அமைப்பு அறம்சார் தத்துவ முறை.

 

Question 2.
சமண, புத்த சமயக் கொள்கைகளுக்கு இடையேயான ஒற்றுமைகளையும், வேறுபாடுகளையும் எழுதுக.
விடை:
ஒற்றுமைகள் :

  • மகாவீரரும், கௌதம புத்தரும் தங்களது 30வது வயதில் குடும்பத்தை துறந்தனர்.
  • சமணரும், புத்தரும் மதச் சடங்குகளுக்காக விலங்குகள் பலியிடுவதை எதிர்த்தனர்.
  • சமணர் மற்றும் புத்தரின் துறவு, இரந்துண்ணுதல், அரச குடும்ப சொத்துக்களைத் துறந்து வாழும் முறை மக்களுக்கு ஏற்புடையவர்களாக ஆக்கின.
  • இருவரும் தூய வாழ்க்கை வாழ்ந்தார்கள். தன்னிலை மறுப்பிற்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்தார்கள்.
  • புகழ்பெற்ற மகதமன்னர்களான பிம்பிசாரர், அஜாத சத்ரு ஆகியோரின் சம காலத்தவர்கள்.
  • வைசியர்கள் சமூக நிலையை உயர்ந்த சமணம் மற்றும் பௌத்தம் நோக்கி திரும்பினார்கள்.
  • மகாவீரரும், புத்தரும் சடங்கு, சம்பிரதாயங்களை எதிர்த்து எழுச்சிமிக்க நன்னெறிப் போதனைகளை முன்வைத்தனர்.
  • காலப்போக்கில் சமணமும். பௌத்தமும் இரண்டிரண்டு பிரிவுகளாகப் பிரிந்தன.

வேற்றுமைகள் :

VII. மாணவர் செயல்பாடுகள் (மாணவர்களுக்கானது)

1. அசோகரின் கல்வெட்டுக் குறிப்புகள் குறித்து ஓர் ஆய்வறிக்கை தருக.
2. புத்தரின் வாழ்க்கை மற்றும் போதனைகளைச் சித்தரிக்கும் வகையில் நண்பர்களுடன் சேர்ந்து நிகழ்த்தவும்

9th Social Science Guide அறிவு மலர்ச்சியும், சமூக – அரசியல் மாற்றங்களும் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்க.

Question 1.
கன்பூசியஸ் எந்த ஆண்டு பிறந்தார் ?
அ) பொ.ஆ.மு. 550
ஆ) பொ.ஆ.மு. 551
இ) பொ.ஆ.மு. 552
விடை:
ஆ) பொ.ஆ.மு. 551

Question 2.
லாவோட்சே எழுதிய நூல் எது?
அ) ஆவண நூல்
ஆ) மாற்றம் குறித்த நூல்
இ) வரலாற்று நூல்
ஈ) தாவோ டே ஞங்
விடை:
ஈ) தாவோ டே ஜிங்

 

Question 3.
மகாவீரர் பிறந்த இடம் _______
அ) ராஜகிருஹம்
ஆ) பாடலிபுத்திரம்
இ) குந்த கிராமம்
ஈ) மகதம்
விடை:
இ) குந்த கிராமம்

Question 4.
வட இந்தியாவில் சத்திரியரல்லாத ஆண்ட முதல் வம்சம்
அ) நந்த வம்சம்
ஆ) சிசுநாக வம்சம்
இ) பால வம்சம்
ஈ) அஜிவிக வம்சம்
விடை:
அ) நந்த வம்சம்

Question 5.
அசோகரை புத்தப்பற்றாளராக மாற்றியவர் யார்?
அ) குப்தர்
ஆ) உபகுப்தர்
இ) சந்திரகுப்தர்
ஈ) சமுத்திரகுப்தர்
விடை:
ஆ) உபகுப்தர்

Question 6.
மௌரியர்களின் ஆட்சி நிர்வாகம் பற்றி விரிவாக எடுத்துரைக்கும் நூல் எது?
அ) இண்டிகா
ஆ) கதசப்தசாயி
இ) அர்த்த சாஸ்திரம்
ஈ) மனுசரிதம்
விடை:
இ) அர்த்த சாஸ்திரம்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
ஜொராஸ்ட்ரியர்களின் புனித நூல் ______
விடை:
ஜென்ட் அவெஸ்தா

Question 2.
ஜீனர் (அ) உலகை வென்றவர் என்று அழைக்கப்படுபவர் யார்?
விடை:
மகாவீரர்

 

Question 3.
இந்தியாவில் செதுக்கப்பட்ட மிக உயரமான சமணச்சிலை எங்கு உள்ளது.
விடை:
கர்நாடகா, சிரவண பெலகொலா

Question 4.
ஆசீவகம் என்ற நாத்திகப் பிரிவைத் தோற்றுவித்தவர் _______
விடை:
மக்கலி கோசலர்

Question 5.
ஹைடாஸ்பெஸ் போர் நடைபெற்ற ஆண்டு _____
விடை:
பொ.ஆ.மு. 326

III. பொருத்துக.

IV. தலைப்பு வினாக்கள்

ஒவ்வொரு தலைப்பின் கீழேயும் உள்ள அனைத்து வினாக்களுக்கும் விடையளி.

Question 1.
மகாவீரர்:
(அ)மகாவீரர் துறவற வாழ்வின் பதின்மூன்றாவது ஆண்டில் எதனைப் பெற்றார்?
விடை:
உயரிய ஞானம் (கைவல்யம்)

(ஆ)மகாவீரர் எங்கு எப்போது காலமானார்?
விடை:
72வது வயதில் ராஜகிருகம் அருகில் உள்ள பவபுரி என்ற இடத்தில் காலமானார்.

(இ)சமண மதத்திற்கு ஆதரவு அளித்த மன்னர்கள் யார்?
விடை:
தனநந்தர்

  • சந்திரகுப்த மௌரியர்
  • காரவேலன்

(ஈ)சமண சமயத்தின் இரண்டு பிரிவுகள் யாது?
விடை:
திகம்பரர்
சுவேதாம்பரர்

 

Question 2.
ஜொராஸ்ட்ரியனிசம்
(அ) இதைத் தோற்றுவித்தவர் யார் ?
விடை:
பாரசீகத்தை சேர்ந்த ஜொராஸ்டர்

(ஆ) அவர் ” ஒளியின் கடவுள் ” என யாரைப் பிரகடனம் செய்தார் ?
விடை:
அஹீரமஸ்தா (ஒளிக் கடவுள்)

(இ) ஜொராஸ்ட்ரியர் எதனைப் போதித்தார் ?
விடை:
ஒரு சமூகத்தின் முதன்மையான நோக்கம் ஒழுக்கத்தை வளர்த்தெடுப்பது.

(ஈ) வழிபாட்டின் உயர்ந்த வடிவம் எது?
விடை:
கடவுளின் வடிவமான தீயை வணங்குவது.

Question 3.
கௌதம புத்தர்
(அ) புத்தரின் இயற்பெயர் என்ன ?
விடை:
சித்தார்த்தர்

(ஆ) புத்தர் பிறந்த ஊர் என்ன ?
விடை:
நேபாளத்தில் உள்ள கபிலவஸ்து

(இ) அவருக்கு எங்கே ஞானோதயம் ஏற்பட்டது?
விடை:
புத்தகயா (மஹாபோதி கோவில்)

(ஈ) புத்தர் முதல் போதனையை எங்கு நிகழ்த்தினார் ?
விடை:
சாரநாத

V. சுருக்கமான விடை தருக.

Question 1.
சமணக் காஞ்சி என்றால் என்ன?
விடை:
சமணம் 7-ம் நூற்றாண்டில் தமிழகத்தில் இருந்த முக்கியமான சமயங்களில் ஒன்று, தற்போதைய காஞ்சி நகரத்துக்கு அருகில் சமணக் காஞ்சி அமைந்துள்ளது. அங்கு உள்ள சமணக் கோயில்களுள் முக்கியமானது திருப்பபருத்திக் குன்றம். இக்கோயிலின் கூரையில் மகாவீரரின் வாழ்க்கைக் கதை ஓவியமாக வரையப்பட்டுள்ளது.

Question 2.
பதினாறு மஹாஜனபதங்கள் யாவை?
விடை:
காசி, கோசலம், அங்கம், மகதம், வஜ்ஜி, மல்லா, சேதி, வட்சா, குரு, பாஞ்சாலம், மத்சயம், சூரசேனம், ஆசாகம், அவந்தி, காந்தாரம், காம்போஜம்.

Question 3.
புத்தரின் போதனைகளில் அஹிம்சையை பற்றி கூறு.
விடை:
அகிம்சை என்பது புத்தரின் அடிப்படையான நம்பிக்கை. அவர் வேள்விகளில் தரப்படும் ரத்தப் பலிகளைக் கண்டித்தார். புத்தத்தை கடைபிடிப்பவரின் அத்தியாவசியமான பண்பு அனைத்து உயிர்களின் மீதும் அன்பு செலுத்துவது.

 

Question 4.
லாவோட்சேவின் போதனைகள் யாவை?
விடை:

  • உலகில் மனிதர்களின் மகிழ்ச்சியின்மைக்குக் காரணம் மனிதர்களின் சுயநலம்.
  • மனித நடத்தைக்கான விதி இயற்கையோடு பொருந்தியிருக்க வேண்டும்.
  • தமது திரட்டப்பட்ட அறிவினைக் கொண்டு அவர்கள் ஒரு நகர நாகரிகத்தை ஏற்படுத்தி, தம்மைத்தாமே மகிழ்ச்சியற்றவர்களாக ஆக்கிக் கொள்கிறார்கள்.

Question 5.
நாளந்தா – குறிப்பு வரைக.
விடை:

  • நாளந்தா அக்காலத்தின் மிகவும் குறிப்பிடத்தக்க கல்வி மையமாகத் திகழ்ந்தது. அதன் நிர்வாகச் செலவுகளுக்காக 100 கிராமங்களின் வருவாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
  • மாணவர்களிடம் கல்விக்கட்டணம் வசூலிக்கப்படவில்லை . மாணவர்களுக்கு இலவசத் தங்குமிடமும் உணவும் தரப்பட்டன.

VI. விரிவான விடையளிக்கவும்

Question 1.
இந்தியாவில் இரும்புத் தொழில்நுட்பம் ஏற்படுத்திய தாக்கம் பற்றி ஆராய்க.
விடை:
இந்தியாவில் இரும்பு தொழில் நுட்பத்தின் தாக்கம்:

  • கங்கைச் சமவெளி மக்கள் தேவைக்கு அதிகமான உணவுப் பயிர்கள் உற்பத்தி செய்ய அறிந்து கொண்டதால் மற்றொரு பகுதி மக்கள் கைத்தொழில்களை மேற்கொள்ள வாய்ப்பு அமைந்தது.
  • கைவினைக்கலைஞர்கள் தமக்கு மூலப்பொருட்களை சேகரித்துத் தரவும், உற்பத்திப் பொருட்களை விநியோகிக்கவும் சிலரை நம்பி இருக்க நேர்ந்தது.
  • இரண்டு விதங்களில் நிகழ்ந்த நகரமயமாக்கலில் ஒருவகை சில கிராமங்கள் இரும்புத்தொழில், மட்பாண்டங்கள் செய்தல், மரவேலைகள் தொழில், நெசவு போன்றவற்றில் ஈடுபட்டதன் மூலம் நிகழ்ந்தது.
  • இரண்டாவது வகை தனித்திறமை கொண்ட கிராமக் கைவிளைஞர் குழுக்கள், மூலப்பொருட்கள் கிடைக்கும் இடத்திற்கு அருகில் இருந்தவாறு சந்தைகளை இணைத்ததன் மூலம் நிகழ்ந்தது.
  • மக்கள் ஒரே இடத்தில் குவிந்தது கிராமங்கள் நகரங்களாகவும் பரிமாற்ற மையங்களாகவும் வளர்ச்சி பெற உதவியது.
    எ.கா. வைசாலி, சிராவஸ்தி, ராஜகிருஹம், கௌசாம்பி, காசி.

 

Question 2.
மௌரியர்களின் ஆட்சி முறை நிர்வாகத்தை பற்றி விவரி.
விடை:
மௌரியர்கள் ஆட்சி நிர்வாகம்:

  • மௌரியர்கள் உருவாக்கிய செயல் திறம்மிக்க அரசாட்சி முறை பெரிய நிலையான ராணுவத்தை அமைக்கவும், பரந்த நிர்வாகத்தை உருவாக்கவும் உதவியது.
  • அரசர் நிர்வாகத்தின் தலைவர். அவருக்கு அமைச்சர்குழு உதவி புரிந்தது. மகாமாத்ரேயர்கள் என்ற அதிகாரிகள் அமைச்சர்களின் செயலாளர்கள். சமஹர்த்தா வருவாய் மற்றும் செலவினங்களுக்குப் பொறுப்பு அதிகாரி.
  • பேரரசு நான்கு மாநிலங்களாகப்பிரிக்கப்பட்டிருந்தது. மாநில ஆளுநர்களாக இளவரசர்களே செயல்பட்டனர். மாவட்ட நிர்வாகம் ஸ்தானிகா என்பவரால் நிர்வாகிக்கப்பட்டது.
  • 5 – 10 கிராமங்களின் நிர்வாகி ‘கோபர்’, நகர நிர்வாகி ‘நகரகா’, வெளிநாட்டவர் கவனிப்பு, பிறப்பு-இறப்பு பதிவு, வணிகம், பல்வேறு உற்பத்தி தொழில்கள், சுங்க-கலால் வரி வசூல் ஆகிய பணிகளை நகரகா தலைமையில் தலா 5 உறுப்பினர்களைக் கொண்ட 6 குழுக்கள் மேற்கொண்டன.
  • இராணுவ நிர்வாகமும், நகர நிர்வாகத்தைப்போலவே 30 பேர் கொண்ட குழுவால் நிர்வாகிக்கப்பட்டது. கிராம மட்டத்தில் ‘கிராமணி’ என்ற அதிகாரி இருந்தார். சிறந்த உளவுத்துறை இருந்தது. நீதி வழங்க முறையான நீதி மன்றங்கள் இருந்தன.
  • கிராமப்புற மேம்பாட்டுக்கு அரசு உபரி வருவாயைப் பயன்படுத்தியது. நிலவிற்பனை தடை செய்யப்பட்டது. வணிகப் பெருவழிகள் உருவாக்கப்பட்டன. தோஆப் பகுதியில் புதிய நகரங்கள் உருவாக்கப்பட்டது.

மனவரைபடம்

அறிவு மலர்ச்சியும், சமூக அரசியல் மாற்றங்களும்


Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 4 அறிவு மலர்ச்சியும், சமூக – அரசியல் மாற்றங்களும் 81
Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 4 அறிவு மலர்ச்சியும், சமூக – அரசியல் மாற்றங்களும் 82

The Complete Educational Website